தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீண்ட இடைவேளைக்கு பின், நடித்திருப்பதாக கூறுகின்றனர். எனக்கு, கேப்பு; ஆப்பு எதுவுமே கிடையாது. நான் தான் டாப்பு, என, வடிவேலு கூறினார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள, கத்தி சண்டை படத்தை, சுராஜ் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது; படம், 18ல் வெளியாகிறது. நிகழ்ச்சியில், வடிவேலு பேசியதாவது:ரொம்ப நாட்களுக்கு பின், நான் நடித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில், எனக்கு கேப்போ, ஆப்போ எதுவும் கிடையாது; நான் தான் டாப்பு. அதற்கு காரணம் மக்கள். இன்று மக்கள் பயன்படுத்தும், பத்திரிகை, இணையதளம் எதுவானாலும், நான் தான், கார்ட்டூன் பொம்மையாக இருக்கிறேன். நான் இல்லாத அரசியல் காமெடி கூட கிடையாது. நான், 24 மணி நேரமும் சினிமாவை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு இல்லாமல், நான் வீட்டில் உட்காரவில்லை. கதை பிடிக்காமல் தான், பல படங்களை தவிர்த்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
விஷால் பேசியதாவது: வடிவேலு இல்லையென்றால், இந்த படம் கிடையாது. ஒரு நடிகர் நடிக்கவில்லை என்றால், வேறு ஒருவர் நடிக்கலாம். ஆனால், வடிவேலு பாத்திரத்தில், அவர் மட்டுமே நடிக்க முடியும். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். விமர்சனம் செய்வது, கருத்து சுதந்திரம். ஆனால், படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே, விமர்சனம் வெளியாகி, படத்தை காலி செய்து விடுகிறது. படத்தை முழுவதுமாக பார்த்து, விமர்சனம் செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.