பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து உள்ளனர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்னதான் இந்த இருவரும் சேர்ந்து நடித்தாலும், ஹாலிவுட்டிலும் கால் பதித்தாலும் இருவருக்கும் இடையே மறைமுகமாக ஒருவித யுத்தம் நடந்து தான் வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா பற்றி தீபிகா மனம் திறந்துள்ளார்.
அதில் தீபிகா பேசுகையில், ‛‛எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது, நான் பள்ளியில் படிக்கும்போது பிரியங்கா உலக அழகி பட்டம் பெற்றார். அவரை எனக்கு ரொம்ப நாட்களாகவே தெரியும். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை அவர் சரியாக செய்து வருகிறார். நான் அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன், அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.