'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் அதே கண்கள். கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் நடிக்கிறார்கள். ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
படத்தை பற்றி இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் கூறியதாவது: இது காதலும் திகிலும் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம். இதில் பார்வையற்றவராக கலையரசன் நடிக்கிறார். பின்னர் அவருக்கு பார்வை கிடைக்கிறது. பார்வை இருக்கும் வரை கலையரசன், ஜனனி, ஷிவதாவின் முக்கோண காதலாக நகரும் கதை. பார்வை வந்ததும் திரில்லராக மாறும் வித்தியாசமான திரைக்கதை. பாலசரவணன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்வதே அவரது கேரக்டர்தான். படத்தின் பின்னணி இசைக்கு ஜிப்ரான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. அடுத்த வாரம் பாடல் காட்சி படப்பிடிப்பு நடக்கிறது. என்றார் ரோஹின் வெங்கடேசன்.