தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடித்த 'மறுபூமியிலே ஆனை' என்கிற படம் வெளியானது.. எதிர்பார்த்த அளவு படம் பிரமாதமாக போகவில்லை என்றாலும் படத்தில் அரபு ஷேக்காக நடித்திருந்த பிஜூமேனன் கேரக்டரும் படத்தில் அவர் செய்யும் கலாட்டாக்களும் ரசிகர்களை கவர்ந்தன.. அதில் ஒன்றுதான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அங்குள்ள இளம்பெண்களுக்கு அவர் மெகந்தி வைத்துவிடும் காட்சி. அந்த காட்சியில் மெகந்தி வைக்கும் பெண்களின் கையில் எல்லாம் குறும்புத்தனமாக தனது செல்போன் நபரையும் எழுதுவார் பிஜூமேனன்..
இந்த காட்சியில் பயன்படுத்துவதற்காக அந்தப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரபா ஜோசப்பின் மொபைல் எண்ணை பயன்படுத்தினார்கள். ஆனால் படம் பார்த்த பெண்களில் பலரும் அது பிஜூமேனனின் உண்மையான நம்பர்தான் என நினைத்து இடைவிடாமல் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பிஜுமேனனுடன் பேசவேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அதிலும் ஒரு குறிப்பிட பெண்ணிடம் இருந்து மட்டும் தினமும் விடாமல் அழைப்புகள் வந்தனவாம். அதன்பின் அந்த பெண் சார்பாக அவரது அம்மா பிரபா ஜோஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாராம்.. இப்போதுதான் அழைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றதாம். கடந்தவருடம் திலீப்பின் 'சந்திரேட்டன் எவிடயா' படம் வெளியானபோதும் இதேபோன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.