ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல்... கமல் உடன் வாழ்ந்த கௌதமி, கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும், நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்பு திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கமல்-கெளதமி இடையேயான பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ஸ்ருதிஹாசனுக்கும் கௌதமிக்கும் ஒத்துப்போகவில்லை அதனால் தான் கமல்-கவுதமி இடையே பிரிவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி ஸ்ருதிஹாசன் சார்பில் அவரது செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ‛‛யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்'' என்று கூறியுள்ளார்.