தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுதமி விவகாரத்தில் நான் எந்த அறிக்கையும், வெளியிடவில்லை என்று கமல் கூறியுள்ளார். திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, கமல் - கவுதமி ஜோடி பிரிந்தது. கமலை விட்டு பிரிவதாக, கவுதமி, நேற்று அறிவித்தார். இதுப்பற்றி நடிகை கவுதமி ஒரு பக்க அறிக்கையாக வெளியிட்டார். குறிப்பாக நானும் கமலும் பிரிந்து விட்டோம் என்பதை, கனத்த இதயத்துடன் உங்களிடம் பகிர்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு இது என்று கூறியிருந்தார்.
இதனிடையே கமல்ஹாசன் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதில், ‛‛என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என் தட்டில் வந்துவிழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டிலிருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்'' என்பது மாதிரியான தகவல்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. ஆனால் இதை கமல் வெளியிடவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனே தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை'' என்று கூறியுள்ளார்.