தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, கமல் - கவுதமி ஜோடி பிரிந்தது. கமலை விட்டு பிரிவதாக, கவுதமி, நேற்று அறிவித்தார். இதுப்பற்றி கவுதமி நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது... ‛‛நானும் கமலும் பிரிந்து விட்டோம் என்பதை, கனத்த இதயத்துடன் உங்களிடம் பகிர்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர், அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்து விட்டது என்பதை உணருவது, அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து, இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பதை தெரிந்து பிரிகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே யோசித்து, இப்போது இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கமலிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியாகத நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது... ‛‛கவுதமிக்கு எது நிம்மதியை கொடுத்தாலும் எனக்கு சரி, இந்தச்சூழலில் என்னுடைய உணர்ச்சிகள் முக்கியமல்ல. கவுதமி - சுப்புலட்சுமி மகிழ்ச்சியாக வாழ்வது தான் முக்கியம். அவர்களுக்கு எப்போது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை மட்டும் இந்தநேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஸ்ருதி, அக்ஷ்ரா ஆகியோருடன் சுப்புலட்சுமியையும் சேர்த்து மூன்று மகள்கள் உள்ளனர். இந்த உலகில் நான் மிகவும் அதிர்ஷ்டக்கார அப்பா என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.