தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோவாவில், 47வது சர்வதேச திரைப்பட விழா, 20ல் துவங்குகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கோவாவில், 20ம் தேதி, 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழா துவங்க உள்ளது. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 1,032 திரைப்படங்கள் விண்ணப்பித்தன; இதில், 88 நாடுகளைச் சேர்ந்த, 194 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்பட உள்ளன. ஐ.எப்.எப்.ஐ., எனப்படும், இந்திய சர்வதேச திரைப்பட விழா, இந்திய திரையுலகில் முதலீடுகளை ஈர்க்கவும், சர்வதேச திறமையாளர்களை பங்கேற்கச் செய்யவும், சிறந்த தளமாக விளங்கும். இவ்வாறு அவர் கூறினார். பாகுபலி ராஜமவுலி தலைமை விருந்தினர்: ஐ.எப்.எப்.ஐ., எனப்படும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஐந்து நபர் சர்வதேச தேர்வுக்குழு தலைவராக, செக் நாட்டை சேர்ந்த, புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் இயக்குனர் இவான் பாஸர் செயல்படுவார். இந்த குழுவில், இந்தியா சார்பில், நாகேஷ் குக்னுார் இடம் பெற்றுள்ளார்.இத்திரைப்பட விழாவில், கொரியா மொழிப்படங்கள் சிறப்பிடம் வகிக்கும். தென் கொரியாவை சேர்ந்த, திரைப்பட ஜாம்பவான்கள் சாங் ஹோ யியோன், ஜாங் லு, லீ ஜூன் லுக் உள்ளிட்டோர், விழாவில் முக்கிய பங்கு வகிப்பர்.போலந்து நாட்டை சேர்ந்த, மறைந்த, பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆன்ரிஸ் வாஜ்தா உருவாக்கிய, ஆப்டர் இமேஜ் திரைப்படம், ஐ.எப்.எப்.ஐ., விழாவில் முதலில் திரையிடப்படும். ஈரான் நாட்டை சேர்ந்த, மறைந்த, திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்டமி நினைவாக, சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தென் கொரியாவை சேர்ந்த, இயக்குனர் கிம் வீ வூன் உருவாக்கிய, தி ஏஜ் ஆப் ஷேடோஸ் திரைப்படம், விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக திரையிடப்படும். பாகுபலி திரைப்பட இயக்குனர் ராஜமவுலி, நிறைவு நாளில், தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்