தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை 'காதல், முத்தம்' ஆகியவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் கமல்ஹாசனைப் பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் இப்போதுதான் 'உலக நாயகன்', ஆனால், பல வருடங்களாக 'காதல் இளவரசன்'. தமிழ் சினிமாவில் 'காதல்' என்றாலும் கமல்ஹாசன், 'முத்தம்' என்றாலும் கமல்ஹாசன் என கொண்டாடப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்த பின், கமல்ஹாசன் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின் அங்கு நடிகையாக இருந்த சரிகாவைக் காதலிக்க ஆரம்பித்தார். அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு முதல் மகள் ஸ்ருதிஹசான் பிறந்த பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண பந்தமும் நீண்ட வருடங்கள் நிலைக்கவில்லை, இருவரும் பிரிந்தனர். சரிகா மும்பைக்கே புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின் கமல்ஹாசன், நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். பல பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஜோடியாகவே வந்தார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக நீடித்த அவர்களது உறவு சமீபத்தில் பிரிந்தது. கமல்ஹாசன் காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே இருவரும் பிரிந்துதான் இருந்தனர் என்றும் சொல்கிறார்கள்.
மனைவி சரிகாவை கமல்ஹாசன் பிரிந்திருந்தாலும் அவருடைய மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் கமல்ஹாசனை அடிக்கடி சந்தித்து வந்தனர். கமல்ஹாசன், கௌதமி பிரிவுக்கு 'சபாஷ் நாயுடு' படமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக வேலை செய்ய ஆரம்பித்தார். மகள்கள் இருவரும் அப்பாவுடனேயே இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. இது கௌதமிக்கு சங்கடத்தைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதோடு, 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கமல்ஹாசன் மகள் பக்கமே நின்றதாகச் சொல்கிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் கமல்ஹாசனை விட்டுப் பிரியலாம் என கௌதமி முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்களாம்.
கௌதமியின் நீண்ட விளக்கக் கடிதம் நேற்று மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் கமல்ஹாசன் அது குறித்து இதுவரை எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்து வருகிறார். டிவிட்டரிலாவது அவர் எதையாவது பதிவிடுவார் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.