Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கௌதமியின் கடிதம், கமலின் மௌனம்

02 நவ, 2016 - 11:04 IST
எழுத்தின் அளவு:
kamal-science-to-the-letter-of-gauthami

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை 'காதல், முத்தம்' ஆகியவற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் கமல்ஹாசனைப் பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் இப்போதுதான் 'உலக நாயகன்', ஆனால், பல வருடங்களாக 'காதல் இளவரசன்'. தமிழ் சினிமாவில் 'காதல்' என்றாலும் கமல்ஹாசன், 'முத்தம்' என்றாலும் கமல்ஹாசன் என கொண்டாடப்பட்ட காலம் ஒன்று இருந்தது.


முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்த பின், கமல்ஹாசன் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின் அங்கு நடிகையாக இருந்த சரிகாவைக் காதலிக்க ஆரம்பித்தார். அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு முதல் மகள் ஸ்ருதிஹசான் பிறந்த பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண பந்தமும் நீண்ட வருடங்கள் நிலைக்கவில்லை, இருவரும் பிரிந்தனர். சரிகா மும்பைக்கே புறப்பட்டுச் சென்றார்.


அதன் பின் கமல்ஹாசன், நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். பல பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஜோடியாகவே வந்தார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக நீடித்த அவர்களது உறவு சமீபத்தில் பிரிந்தது. கமல்ஹாசன் காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே இருவரும் பிரிந்துதான் இருந்தனர் என்றும் சொல்கிறார்கள்.


மனைவி சரிகாவை கமல்ஹாசன் பிரிந்திருந்தாலும் அவருடைய மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோர் கமல்ஹாசனை அடிக்கடி சந்தித்து வந்தனர். கமல்ஹாசன், கௌதமி பிரிவுக்கு 'சபாஷ் நாயுடு' படமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக வேலை செய்ய ஆரம்பித்தார். மகள்கள் இருவரும் அப்பாவுடனேயே இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. இது கௌதமிக்கு சங்கடத்தைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.


அதோடு, 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கமல்ஹாசன் மகள் பக்கமே நின்றதாகச் சொல்கிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் கமல்ஹாசனை விட்டுப் பிரியலாம் என கௌதமி முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்களாம்.


கௌதமியின் நீண்ட விளக்கக் கடிதம் நேற்று மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் கமல்ஹாசன் அது குறித்து இதுவரை எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்து வருகிறார். டிவிட்டரிலாவது அவர் எதையாவது பதிவிடுவார் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in