பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் ஊரோரம் புளிய மரம் -என்ற பாடலை பாடியவர் கிராமிய இசைக்கலைஞர் பாண்டி. இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரியாப்பட்டி என்ற ஊரைச்சேர்ந்தவர். பருத்தி வீரன் பாடல் ஹிட் டடித்ததை அடுத்து வெண்ணிலா கபடிக்குழு, மாட்டுத்தாவணி உள்பட பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். அதோடு, தனது மனைவி பச்சையம்மாளுடன் இணைந்து ஏராளமான இசைக்கச்சேரிகளில் பாடியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பால் மரண மடைந்து விட்டார் பாண்டி. அந்த சேதியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவி பச்சையம்மாளும் மரணமடைந்து விட்டாராம். அந்நியோன்யமாக வாழ்ந்து வந்த இந்த இசைத்தம்பதியினர் ஒரே நாளில் இறந்து விட்டதால் விருதுநகர் ஏரியா மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது