‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கதையே இல்லாத படம் என்று சொல்லிக்கொண்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கினார் பார்த்திபன். அதோடு தான் இயக்கிய எல்லா படங்களிலுமே நடித்து வந்த அவர் அந்த படத்தில் திரைக்குப்பின்னால் இயக்குனராக மட்டுமே செயல்பட்டார். அப்படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. என்றாலும், அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளர் கிடைக்காததால் சில படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து வந்த அவர், தற்போது கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கிறார்.
மேலும், அந்த படம் எந்த மாதிரியான கதை என்பதை பார்த்திபன் தரப்பு வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்துள்ளனர். ஆனால், அதுபற்றி விசாரித்தபோது, அப்படம் பேய் கதையில் உருவாகி வருவதாக தெரிகிறது. ரஜினியின் சந்திர முகி, சுந்தர்.சியின் அரண்மனை படங்களை பாணியில் ஒரு பங்களாவுக்குள் நடக்கும் பேய் கதையில் அப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் பார்த்திபன் பேய் ஓட்டுபவராக வருகிறாரா? இல்லை வேறு மாதிரியான கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.