இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இந்தியின் பிலிம் பெர்சனாலிட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
1966ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் இவரை பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. தமிழில் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா... பாடலே முதல் பாடலாக வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் சிறிய நடிகர்களுக்கும் கூட பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது பல இந்திய மொழிகளிலும் பல அருமையான பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பவர். இதுவரை சுமார் 40000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசு, எஸ்பிபிக்கு., இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருதை அறிவித்துள்ளது. கோவாவில் நடக்கும் 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
விருது குறித்து எஸ்பிபி கூறுகையில், விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக கலைத்துறையினர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.