டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோவாவில் நடைபெறும் உலகப்படவிழாவில், இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 250க்கும் மேற்பட்ட படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழில் சூர்யா தயாரித்து நடித்த 24 படமும், மாதவன் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படமும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் இறுதிச்சுற்று படம் மட்டுமே தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டடிருக்கிறது. பல வெளிநாட்டுப் படங்களின் சாயல் இருப்பதால் 24 படம் தேர்வு செய்யப்படவில்லை. 26 படங்களில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் தலா 4 படங்கள் தேர்வாகியுள்ளன. மலையாளம், கன்னடம் மொழிகளில் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, மணிப்பூரி, சமஸ்கிருதம், அஸ்ஸாமி, கொங்கணி, கோஸ், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்கள் தலா ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மிகப்பெரிய இண்டஸ்ட்ரியான தமிழ், தெலுங்குப் படங்களுக்கு இந்தியன் பனோரமாவில் போதிய எண்ணிக்கையில் படம் தேர்வாகாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.