டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் தொடங்கி விஜய் நடித்த ஜில்லா படம் வரை 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் அவர் தயாரித்த படங்களில் ஏறக்குறைய 90 சதவிகித படங்கள் வெற்றிப்படங்கள்தான். ஹீரோக்களின் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்தது, தயாரிப்பு செலவு அதிகரித்தது, படங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சனை ஆகிய காரணங்களால் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பிலிருந்து விலகி இருந்தார்.
கடைசியாக அவர் தயாரித்த ஜில்லா படமும் கசப்பான அனுபவமாக முடிந்ததால் இனிமேல் படங்களை எடுப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தார். இந்நிலையில் ஜீவாவின் சிபாரிசில் ஆர்யாவை வைத்து கடம்பன் என்ற படத்தை தயாரிக்க முன்வந்தார். மஞ்சப்பை ராகவன் இயக்கும் இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா நடிக்கிறார். முதலில் ஆர்.பி.சௌத்ரி மட்டுமே தயாரிப்பதாக இருந்த கடம்பன் படத்தை இப்போது ஆர்யாவின் ஷோ த பீப்பிள் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.