'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படம் மரகத நாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர முண்டாசுபட்டி ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ், டேனியல், ஆனந்தராஜ், கோட்டா சீனிவாசராவ், பரமானந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் உதவியாளர் திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார்.
"இன்று நேற்று நாளை போன்றே இதுவும் பேண்டசி கதை. அதில் டைம் மிஷின் மேட்டர், இதில் மரகத நாணயம் மேட்டர். மன்னர் காலத்தை சேர்ந்த ஒரு முக்கிய பொருள் மரகத நாணயம். பல கோடி மதிப்புள்ள அந்த நாணயத்தை பற்றி ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு இரண்டு குரூப்கள் அதனை தேடிச் செல்கிறது. ஆதி தலைமையில் ஒரு குரூம், வில்லன் கோட்டா சீனிவாசராவ் தலைமையில் ஒரு குரூப்.
மரகத நாணயம் பற்றி மன்னர் கால காட்சிகள் இருக்கிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் ராகுல் பிரமாண்ட அரண்மணை செட் போட்டுக் கொடுத்தார். படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். சீரியசான கதை போல தெரிந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.