இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வாகை சூடவா இனியாவுக்கு சமீபகாலமாக கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் சென்னையில் ஒருநாள் படத்தில் இருந்து கேரக்டர் நடிகையாக மாறி விட்டார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள திரைக்கு வராத கதை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இனியா, தெலுங்கு, மலையாளத் திலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி இனியா கூறுகையில், சினிமாவில் கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து நான் பெரிதாக பீல் பண்ணவில்லை. மாறாக, கேரக்டர் நடிகையாக நீண்டகாலம் வலம்வர முடிவெடுத்துள்ளேன். அதனால்தான் அழுத்தமான கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன். தற்போது தமிழில் பொட்டு, காதல் சொல்ல நேரமில்லை, ரெண்டாவது படம், வைகை எக்ஸ்பிரஸ் என பல படங்க ளில் நடிக்கிறேன். இந்த படங்களில் குறைவான நேரமே வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பேன்.
என்னைப்பொறுத்தவரை படம் பார்த்து விட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் நான் நடித்த கதாபாத்திரம் நிற்க வேண்டும். அது எனக்கு போதும். அதனால்தான் என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் கதையை கேட்டு நடிக்கிறேன். வாய்ப்பு வேண்டும் என்பதற்காக கண்மூடித்தன மாக எந்த படத்திலும் நான் கமிட்டாவதில்லை என்கிறார் இனியா.