மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
விஜய் ஹீரோவாக நடிப்பதாக இருந்தால், நான் டைரக்டர் ஆகி படம் இயக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராகத்தான் சினிமாவில் பணியாற்றி வந்தார். இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை ஹீரோவாக்கி, அடுத்தடுத்து வெற்றியையும் கொடுத்ததால் தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்ததில் இருந்து விஷாலின் மாஸ் ரொம்பவே கூடிவிட்டது.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தனது டைரக்டர் ஆசை பற்றி கூறியிருக்கிறார். விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் டைரக்டர் ஆக ரெடி என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் விஷால்.