'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா, தீபாவளியை முன்னிட்டு, ‛தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
*தீபாவளிக்கு வெளியாகும் ‛கொடி' படம் எப்படி இருக்கும்?
பொள்ளாச்சி பின்னணியில் நடக்கும் அரசியல் நெடியுடன் கூடிய கதை. இதுவரை மரங்களை சுற்றி டூயட் பாடிய நான், இந்தப் படத்தில் ரொம்ப வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ருத்ரா என்ற தைரியமான பெண் பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது.
*‛ஆடுகளம்' படத்தில் தவற விட்ட வாய்ப்பு, மீண்டும் கிடைத்தது குறித்து?
‛ஆடுகளம்' பட வாய்ப்பு வந்த போது, கால்ஷீட் சரியாக அமையவில்லை. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் ஜோடி சேரும் வாய்ப்பு, ‛கொடி' படத்தில் கிடைத்தது. தனுஷ் ரொம்ப திறமைசாலி. நடிகர், பாடகர், தயாரிப்பாளர் இப்போது இயக்குனராகவும் மாறி இருக்கிறார். இவை அனைத்திற்கும் தகுதியானவர் அவர்.
*ஒரே மாதிரியான படங்களில் நடித்து உங்களுக்கு போர் அடிக்கவில்லையா?
நான் இதுவரை நடித்த படங்களில் கதைகள் கண்டிப்பாக வித்தியாசமாகவே இருக்கும். டூயட் பாடி, கண்ணீர் விட்டு போராடிக்காம; அழுத்தமான ரோலில் நடிக்கும் வாய்ப்பு ‛கொடி' படத்தில் அமைந்தது. இதுமாதிரி வேடங்கள், இப்ப எனக்கு நிறைய வருகிறது.
*சமீபகாலமாக, நாயகிக்கு முக்கியத்துவம் படங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது போல் இருக்கிறதே?
அப்படியெல்லாம் இல்லை தானாகவே அதுபோன்ற பாத்திரங்கள் வருகிறது. இது, எதிர்பாராமல் அமைவது தான். வயது, அனுபவம் தாண்டி, திரிஷாவால் இந்த மாதிரி கதைகளில் நடிக்க முடியும் என, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்து இருக்கலாம்.
*சினிமாவில், 15 ஆண்டுகளாக திரிஷாவின் இடத்தை மற்ற யாரும் அடைய முடியவில்லையே?
அது கடவுள் கொடுத்த வரம். அப்புறம் ரசிகர்களும் முக்கிய காரணம்.
*இந்தாண்டு தீபாவளியை எப்படி கொண்டாட போகிறீர்கள்?
இரட்டை தீபாவளி எனக்கு. ‛கொடி' படத்தை தியேட்டருக்கு சென்று, நண்பர்களுடன் பார்க்க போகிறேன். அம்மா சமையல் சாப்பிட்டு, என் செல்ல நாய்குட்டிகளோடு நேரத்தை செலவிடுவேன்.
*ராணா, காதல், கிசுகிசு, கல்யாணம்...?
அப்படி எதுவுமே இல்லை. இப்போதைக்கு, நான், என் சினிமா. வேற எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நீங்கள் யாரை வைத்து, எதை எழுதினாலும் அதில் உண்மை இருக்காது.
*சினிமாவில் வந்த போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இப்போதும் இருப்பது எப்படி?
மில்லியன் டாலர் கேள்வி இது. அது கூட கடவுள் கொடுத்த வரம் தான். சாக்லெட், ஐஸ்கிரீம், சாப்பாடு எல்லாமே சாப்பிடுவேன். நேரம் கிடைக்கும் போது யோகா, ஜிம் போவேன். மற்றபடி எந்த ரகசியமும் இல்லை.
*புதுமுக இயக்குனர்கள், நடிகர்களுடன் நடிப்பது இல்லையே ஏன்?
அப்படி எதுவும் இல்லை. எல்லோருடனும் நடிக்க நான் தயார். கதை வலுவாக இருக்க வேண்டும். நடிகையாக ஜெயிப்பதை விட, அந்த இடத்தை தக்க வைக்க நிறைய போராட வேண்டியது அவசியமாகிறது. எல்லாரும் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது; வேற ஒருத்தர் வரலாம். இதை எல்லாம் மனதில் வைத்து தான். நான் செயல்படுகிறேன்.
*திரிஷா என்றாலே பார்ட்டி தான்; இப்போது குறைந்து விட்டதோ?
எனக்கு எப்பவுமே பார்ட்டி போற பழக்கம் இல்லை. அதற்காக போக மாட்டேன் என சொல்ல மாட்டேன். முன்னாடி எப்படி இருந்தேனோ இப்பவும் அப்படியே தான் இருக்கேன். எனக்கு நட்பு; குடும்பம் இரண்டும் முக்கியம். நீங்க தான் நான் அதிகமாக பார்ட்டி போறேன்னு எழுதுறீங்க.
*கிசுகிசுவுக்கும் திரிஷாவுக்கும் உள்ள நட்பு?
அதெல்லாம் இப்ப நான் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. பேப்பரில் செய்தி வந்தால், என் பாட்டியே படிச்சு காட்டுவாங்க. வீட்டில் யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் பழகி போச்சு.
*உங்கள் வளர்ச்சிக்கு உதவிய நடிகர்கள் யாராவது இருக்கிறார்களா?
நான் துவண்டு போய் இருந்த போது, என்னை முதுகில் தட்டி, வெளியே கொண்டு வந்து, ‛தூங்காவனம்' பட வாய்ப்பை கொடுத்தவர் கமல். எனக்கு அறிவுரை கூறி, என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் ஆசிரியர் போல கமல் இருந்தார்.
*அஜித், விஜய் பற்றி?
இரண்டு பேருடனும் நான்கு படங்கள் ஜோடியாக நடித்துள்ளேன். இருவரும் கடுமையான உழைப்பாளிகள். அமைதியானவங்க. இருவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.