ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ஐஎஸ்எம் எனும் சமூக அக்கறை கொண்ட படத்தில் நாயகனாக நடித்த கல்யாண் ராம், அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். நாக சௌரியா நாயகனாக நடிக்க, “அப்பேயிதோ அம்மாயி” எனும் படத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவிற்கு அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இருப்பினும் ரமேஷ் கூறிய குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து திரைக்கதை கல்யாண் ராமை வெகுவாக கவர்ந்து விட்டதால் ரமேஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரவி தேஜாவின் பெங்கால் டைகர் படத்தை தயாரித்த ராதா மோகன் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சின்னி ராமைய்யா என பெயரிட்டுள்ளனர். குறைந்த பட்ஜெடில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.