அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் சிவகுமாரின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை லலித்கலா அகாடமியில் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதலில் மூன்று நாட்கள் மட்டும் என்று சொல்லப்பட்டது. தற்போது மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் ஒரு அங்கமாக சிவகுமாரின் Paintings Of Siva Kumar' புத்தகத்தையும் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழ் அருவி மணியன் இப்புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் சூர்யா பேசும்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனி வருடம்தோறும் தன்னுடைய அப்பா சிவகுமாரின் பிறந்த நாள் அன்று ஓவிய போட்டி ஒன்றை நடத்தி அதில்வெ ற்றி பெறுபவருக்கு பரிசு வழங்க திட்டமிட்டுள்ளளனர். Paintings Of Siva Kumar' புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய கோரிக்கையாக இதை வைத்தார்.
உடனடியாக அதை ஏற்றுக் கொண்ட சூர்யா, ஓவியர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அந்த விழாவிலேயே அறிவித்தார். லலித்கலா அகாடமியில் நடைபெற்று வரும் சிவகுமாரின் ஓவிய கண்காட்சியை ஏற்பாடு செய்ததிலும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதருக்கு மிகப்பெரிய பங்கு இருந்திருக்கிறது.