இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் ஆகியோர் நடிப்பில் பிரச்னைகள் பல தாண்டி ஒருவழியாக நாளை(அக்.,28-ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இப்படத்திற்கு பல பிரச்னைகள் எழுந்தது ஒருபுறம் என்றால் மற்றொரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது ரன்பீர்-ஐஸ்வர்யா இடையேயான நெருக்கமான காட்சிகள். இதுப்பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த ரன்பீர், இப்போது முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க நான் தயங்கினேன், கையெல்லாம் நடுங்கியது. அவரது கன்னத்தை தொடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவர் என்னை திட்டினார், என்னைப்பார், என்னாச்சு உனக்கு, ஒழுங்காக நடி, நாம் எல்லாம் நடிகர்கள் என்று ஊக்கம் கொடுத்தார். பின்னர் அவருடன் தைரியமாக நெருக்கமாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.