டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அந்த இயக்குனர் தன்னை தேடிவந்து கதைசொன்னபோது மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மறு முடிவு எடுக்கவே இல்லை.. உடனே ஒகே சொல்லிவிட்டார். அந்த இயக்குனர்தான் மலையாள இயக்குனர் போபன் சாமுவேல். ஆனால் அவர் ஒப்புக்கொண்டது போபன் சாமுவேலுக்காக அல்ல.. அவருடனேயே கதை சொல்ல வந்திருந்த பிரபல கதாசிரியர் உதயகிருஷ்ணாவை பார்த்துத்தான். பின்னே.. மலையாள சினிமாவின் வசூலில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மோகன்லாலின் புலி முருகன் படத்திற்கு கதையெழுதிய கதாசிரியர் அவர்தானே..? அதுமட்டுமா, இதுவரை திலீப்பின் திரையுலகில் வாழ்க்கையில் பத்துக்கும் மேற்பட்ட ஹிட்டுகளை கொடுத்தவர் ஆயிற்றே.!
அதனால்தான் இதுவரை சராசரி வெற்றிகளை மட்டுமே கொடுத்த இயக்குனர் என்றாலும், கதாசிரியர் மீதும் கதையின் மீதும் உள்ள நம்பிக்கையால் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் திலீப்.. இந்த போபன் சாமுவேல் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று உண்டு. ஏற்கனவே நான்கு படங்களை இயக்கியுள்ள போபன் சாமுவேல் முதல் மூன்று படங்களில் குஞ்சாக்கோ போபனையும் ஜெயசூர்யாவையும் மாறி மாறி கதாநாயகர்களாக நடிக்க வைத்தார். நான்காவது படமாக இந்த வருடம் வெளியான ஷாஜகானும் பரீக்குட்டியும் படத்தில் இந்த இருவரையும் சேர்த்தே இயக்கினார்.. இப்போதுதான் மூன்றாவதாக ஹீரோவாக திலீப்புடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.