மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ரஜினியை மாடலாக வைத்து 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்தப் படம் எதிர்பாரர்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே டைரக்ஷன் பக்கம் வராமல் தயாரிப்பு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்குகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
மிகப்பெரிய வெற்றிபெற்ற 'தெறி', 'கபாலி' படங்களை தொடர்ந்து கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் புதிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகிறது என்றும், இந்தப்படத்தில் நடிக்கவும், பணியாற்றவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரங்களை செய்திருந்தனர்.
அதன் பிறகு, இந்தப் படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. இப்போது திடீர் திருப்பமாக இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ் இன்னொரு பக்கம் ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.