'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிசாசு படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் அரோல் கரோலி. தற்போது சவரக்கத்தி படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிசாசு படத்தில் ஒரே பாடல்தான். அதேபோல சவரக்கத்தி படத்திலும் ஒரே பாடல்தான். ஆனால் இரண்டு படங்களும் பின்னணி இசைக்கு முக்கியத்துவமான படங்கள். இதுபற்றி அரோல் கரோலி கூறியதாவது...
சவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, "தங்கக்கத்தி, இரும்புக்கத்தி...", மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான "அன்னாந்து பார்...." பாடல். இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே, காட்சிகள் தான். எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை. நிச்சயமாக யதார்த்தமான காட்சிகளில் உருவான இந்த "அன்னாந்து பார்...." பாடலை திரைப்படத்தில் பார்க்கும் பொழுது, ஒரு புதுவித அனுபவம் ரசிகர்களின் உள்ளங்களில் ஏற்படும்.
மிஷ்கின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும். அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதற்கேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஒரு இசை அமைப்பாளரின் வெற்றிக்கு இயக்குனர்கள் மிகவும் முக்கியம். மிஷ்கின் படங்களின் பாடல்களின் வெற்றிக்கு அதுதான் காரணம். என்கிறார் அரோல் கரோலி.