ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படம் விரைவில் வெளிவருகிறது. அவர் தயாரித்து வரும் நெருப்புடா படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இன்றைய சினிமா சூழ்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சினிமா கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் சினிமா பார்த்த மக்கள் இப்போது செல்போனில் சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனி வருங்காலத்தில் தியேட்டர்கள் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபுவின் காலம் சினிமாவின் பொற்காலம். ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது வெற்றிக்கு நிறைய போராட வேண்டும். கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டும். சும்மா நடித்துவிட்டு, ஆடிவிட்டு போக முடியாது. ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு வெற்றி கிடைக்கும்.
வீர சிவாஜியும், முடிசூடா மன்னனும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இனி நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். நான் தயாரிக்கும் நெருப்புடா படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. திறமையான புதுமுகங்களை எனது பேனரில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவேன். அன்னை இல்லம் தொடர்ந்து சினிமாவுக்காக உழைத்துக் கொண்டே இருக்கும். என்றார். பேட்டியின் போது பிரபு, ராம்குமார் உடன் இருந்தனர்.