தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாதம், 2.5 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், பிரிந்து வாழ்கின்றனர். சேர்ந்து வாழ, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், நடிகை ரம்பா மனு தாக்கல் செய்து உள்ளார். மனு மீதான விசாரணை முடியும் வரை, பராமரிப்பு தொகை கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு முன், சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தேன். பின், நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கும், இரு குழந்தைகளை பராமரிக்கவும், போதிய வருமானம் இல்லை. என் மூத்த மகளின் பள்ளி படிப்புக்கு, ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இளைய மகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனக்கும், குழந்தைகளின் பராமரிப்புக்கும், மாதம், 2.5 லட்சம் ரூபாய் தேவை. என் கணவருக்கு, தொழிற்சாலை உள்ளது; மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. என்னையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. எனக்கு, 1.5 லட்சம் ரூபாய்; குழந்தைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, 2.5 லட்சம் ரூபாய் வழங்கும்படி, கணவருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.