டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரிஷா கதையின் நாயகியாக நடித்த நாயகி படம் அவரை ஏமாற்றி விட்டது. அந்த படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்த திரிஷாவின் மேனேஜர் கிரிதர், கதையை சொன்ன மாதிரி படமாக்காமல் வேறு மாதிரியாக படமாக்கி விட்டாராம். அதனால் பர்ஸ்ட் காப்பி பார்த்து செம டென்சனாகி விட்டாராம் திரிஷா. அதன்காரணமாகத்தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தாராம்.
அதையடுத்து, தற்போது மாதேஷ் இயக்கியுள்ள மோகினி படத்தில் நடித்துள்ள திரிஷா, இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அவதார் கெட்டப்பில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, படத்தின் முதல்காப்பியை பார்த்த திரிஷா திருப்தியாக இருக்கிறாராம். இந்த படம் தனக்கு பெரிய வெற்றியாக அமையும் என்கிற உற்சாகத்தில் இருப்பவர், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளாராம்.
மேலும், திரிஷாவை மட்டுமே நம்பி சில கோடிகளை செலவு செய்து இந்த படத்தை இயக்கியிருக்கும் மாதேஷ்க்கும் ஒரு வெற்றி தேவைப்படுவதால் மோகினி படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதனால் படத்தை வெளியிட ஸ்டுடியோ கிரீன் உள்ளிட்ட சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்