பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
வானவராயன் வல்லவராயன், நவரச திலகம் படங்களை அடுத்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வெளியாகயிருக்கும் படம் கடலை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து மா.கா.பா.ஆனந்த் கூறும்போது, நான் நடித்த முதல் படம் வெற்றியாக அமைந்தநிலையில், நவரச திலகம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இருப்பினும் கடலை படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறேன். அதுவும் தீபாவளி அன்று தனுஷ், கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் படங்களோடு என் படமும் வெளியாவதே எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும், கடலை நல்ல ஜாலியான படம் என்பதால் இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தது நல்ல அனுபவமாக அமைந் துள்ளது. என்னை விட சீனியர் அவர். நிறைய படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த கடலை படத்திலும் அவர் அருமையாக நடித்துள்ளார். அதோடு, அவருடன் இணைந்து நடித்த காட்சிகளின்போது எனக்கு அவ்வப்போது நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அது பெரிய உதவியாக இருந்தது. அதனால் நாங்கள் நடித்துள்ள காட்சிகள் ரொம்ப நன்றாக வந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி திறமையான நடிகைகளுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறும் மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரொம்ப பெரிய இடத்துக்கு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.