விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சர்வர்சுந்தரம் படத்தில் நடித்துள்ள சந்தானம், அடுத்தபடியாக செல்வராகவன், கண்ணா லட்டு தின்ன ஆசையா மணிகண்டன் மற்றும் சேதுராமன், பச்சையப்பன் ராஜா என பல டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார். இதற்கிடையே கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடிக்க யிருப்பதாகவும் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பச்சையப்பன் ராஜா என்பவர் சந்தானத்தை வைத்து இயக்கயிருந்த படம் தற்போது ட்ராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில்தான் புலியுடன் இணைந்து சந்தானம் நடிப்பதாக இருந்தது. அதற்காக கிராபிக்ஸ் புலியையும் வடிவமைக்கும் பணிகள் நடந்தன. ஆனால், முதலில் டைரக்டரிடம் கதை கேட்டு ஓகே செய்திருந்த சந்தானம், படப்பிடிப்பு தொடங்கும் தருவாயில் மீண்டும் கதையே கேட்டபோது முதலில் சொன்ன மாதிரி இல்லையாம். நிறைய திருத்தங்கள் செய்திருந்தார்களாம். அது சந்தானத்திற்கு திருப்தி கொடுக்கவில்லையாம். அதனால் அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி விட்டாராம் சந்தானம். இதனால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தெரிகிறது.