தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. இவரது திரையுலக ஆரம்பமே மோகன்லாலை வைத்து இயக்கிய 'உதயநாணுதாரம்' படத்தின் மூலம் தான் நிகழ்ந்தது.. இவர் இயக்கிய ஏழு படங்களில் மூன்று படங்கள் மோகன்லால் நடித்தது தான். அதில் இரண்டு வெற்றி.. ஒன்று ஆவரேஜ்.. அவ்வளவு ஏன்..? மோகன்லால் நடிப்பில் 'உதயநாணுதாரம்' படத்தில் ஒரு டைரக்டராக நடித்திருந்த மோகன்லாலின் குணாதிசயங்களாக காட்டப்பட்டவை எல்லாம் ரோஷன் ஆண்ட்ரூஸின் உண்மையான குணாதிசயங்கள் தான்.
இந்த விஷயங்களை எல்லாம் நீட்டி முழக்கி சொல்வதற்கு காரணம் இருக்கிறது.. ரோஷன் ஆண்ட்ரூஸ் பள்ளியில் படிக்கும் சிறுவனாக இருந்தபோது, அதாவது 1987ல் அவர் வசிக்கும் பகுதியில் 'ஜனவரி ஒரு ஒர்ம' என்கிற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.. உடனே சிறுவர்கள் அனைவரும் பட்டாளம் அனைத்தும் ஷூட்டிங்ஸ்பாட்டை முற்றுகையிட, மோகன்லாலும் ஷூட்டிங் இடைவேளையில் அவர்களுடன் நன்றாக சிரித்து பேசி மகிழ்ந்தார். அப்போதே மோகன்லால் அவரது மனதுக்குள் அழுத்தமாக பதிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்..
அப்போது சிறுவர்களிடம் பேசிக்கொண்டே வந்த மோகன்லால், ரோஷன் ஆண்ட்ரூஸிடம் நீ என்ன ஆகப்போகிறாய் என கேட்டுள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ் கொஞ்சமும் தயங்காமல் நான் பெரியவனாகி இதேபோல உங்களது படத்தை டைரக்ட் பண்ணுவேன் என கூறியுள்ளார். மோகன்லாலும் சிரித்துக்கொண்டே அவரை தட்டிக்கொடுத்துள்ளார்.. அப்போது முதல் அவரது மனதில் மோகன்லால் படத்தை இயக்கவேண்டும் என்பது லட்சியமாக மாறியதாம்.. ஆனால் கூட இருந்த பையன்கள் இவர் சொன்னதை கேட்டு கேலி பண்ண ஆரம்பிக்கவே, அதை சபதமாகவே மாற்றிக்கொண்டாராம்..
அதன்பின் 18 வருடங்கள் கழித்து மோகன்லாலை வைத்து 'உதயநாணுதாரம்' என்கிற தனது முதல் படமாக இயக்கி, தனது சபதத்தை நிறைவேற்றினார். இந்தக்கதை ரசிகர்களுக்கு நிச்சயம் புதிதாகவே இருக்கும்.. மேலே உள்ள படத்தில் மோகன்லாலுடன் உள்ள சிறுவர்களில் பச்சை போர்வை போர்த்திக்கொண்டு (சிவப்பு வளையத்துக்குள்) இருக்கும் சிறுவன் தான் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப்புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளளார் மோகன்லால்.