ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்ட நடிகர் பிரபாஸ். இவர் தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் தூம் படத்தின் நான்காம் பாகத்தில் பிரபாஸ் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரபாஸ் தூம்-4 படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தாவது... "தூம் -4 படத்தில் நான் நடிக்கவில்லை. மேலும் என்னிடம் இப்படம் பற்றி யாஷ் ராஜ் படக்குழுவும் பேசவில்லை. இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியாகும். ஆனால் எனக்கு பாலிவுட்டில் பட வாய்ப்பு வருவது உண்மைதான். தற்போது என்னால் இந்தி படங்களில் நடிக்க முடியாது, ஏனென்றால் நான் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளேன். அந்த இருப்படங்களும் பாகுபலி-2 படம் முடிந்ததும் நடிப்பேன் " என்றார்.