பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் மெல்லிசை. ரஞ்சித் ஜெயக்கொடி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரபேல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரித்துள்ளார்.
இந்தப் படம தயாராகி 2 ஆண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்னைகள் காரணமாக வெளியாகாமல் உள்ளது. இதில் நடித்த காயத்ரியும் இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் தலைப்பை புரியாத புதிர்' என்று மாற்றி உள்ளனர். அதோடு படத்தை அடுத்து மாதம் வெளியிடவும் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
மெல்லிசை என்பது ஏதோ இசை தொடர்பான படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இது மனித உணர்வுகளை பேசுகிற படம், அதனால் தலைப்பை மாற்ற முடிவு செய்தார்கள். பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக புரியாத புதிர் என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முதல் படத்தின் டைட்டில் இது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியை சந்தித்து அவரின் முறையான அனுமதி பெற்று படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர்.