ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக்கு கேரளாவிலும் ரசிகர்கள் நிறைய உருவாகிவிட்டனர்.. இதனால் தனது படங்க ரிலீசாகும்போது கேரளா புரமோஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அந்தவகையில் கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்-28 அன்று வெளியாக இருக்கிறது.. கோகுல் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தபடத்திற்கு இசையமைத்துள்ளார்.. தற்போது இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுற்றிவருகிறார் கார்த்தி.
கேரளாவிலும் இந்தப்படம் பெரிய அளவில் வெளியாவதை முன்னிட்டு நேற்று கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காஷ்மோரா படம் குறித்த விரிவான தகவல்களை பகிர்ந்துகொண்டார் கார்த்தி.. பொதுவாக நம்ம ஊர் ஆட்கள் அங்கே கேரளா புரமோஷனுக்கு போகும்போது ஒரு டீமாக செல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் காஷ்மோரா படக்குழுவினர் யாருமே இல்லாமல் தன்னந்தனி ஆளாக கார்த்தி ஒருவர் மட்டுமே கேரள மீடியாக்களை எதிர்கொண்டார்.
தான் எப்போதுமே மோகன்லாலின் தீவிர ரசிகர் என்று கூறிய கார்த்தி, துல்கர் சல்மானும் தானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் காஷ்மோராவுக்காக அதிக நாட்களை ஒதுக்க வேண்டி வந்ததால் இருவரும் இணைந்து நடிக்க முடியாமல் போனதாகவும் வருத்ததுடன் குறிப்பிட்டார். நல்ல கதைகள் அமைந்தால் சில வருடங்கள் கழித்து மலையாள மொழியையும் கற்றுக்கொண்டு மலையாள படங்களில் நடிக்கும் ஆசையும் இருப்பதாகவும் கூறினார் கார்த்தி.