இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல மலையாள நடிகர் லால்... ம்ஹூம்.. நமக்கு எப்பவும் அவர் சண்டக்கோழி வில்லன் தான். இந்த வருட ஆரம்பத்தில் திலீப்பை வைத்து 'கிங் லையர்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவருக்கு, அதன்பின் 'புலி முருகன்' பட ஷூட்டிங்கே கதி என மற்ற படங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்தார். அவரும் மோகன்லாலும் நீண்ட நாட்கள் கழித்து இணைந்து நடிக்கும் படம். அதிலும் மோகன்லாலின் நண்பனாக படம் முழுவதும் வரும் வேடம் என்பதால் தனது முழு அர்ப்பணிப்பையும் இந்தப்படத்திற்காக கொடுத்தார்.
இப்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதுடன், லாலின் நடிப்பையும் ரசிகர்கள் ஆகா ஓஹோவென பாராட்டுவதால் மனிதர் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு காட்டில் நடந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்து லாலை மிரள வைத்ததாம். அதாவது கதைப்படி தன்னை தேடிவரும் (அன்பு) பாலாவையும் அவரது நண்பரையும் காட்டில் வரவேற்கும்போது ஒரு கையில் பாம்பை பிடித்தபடி லால் என்ட்ரி கொடுக்க வேண்டும். இதற்காக இரண்டு பாம்புகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டனவாம். பாம்புடன் நடிப்பதா என லால் பயப்பட, பாம்புக்கு வேண்டுமானால் டூப் போடலாமா என அவரிடம் கேட்டார்களாம். அவரோ, பாம்பு ஒரிஜினலாக இருக்கட்டும், எனக்கு வேண்டுமானால் டூப் போடுங்கள் என சமாளித்து எஸ்கேப் ஆக பார்த்தாராம்.
ஆனால் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, இந்த காட்சியை படமாக்கும் முன், இரண்டில் ஒரு பாம்பு எப்படியோ நழுவி ஒரு பாறையின் இடுக்கில் சென்று புகுந்துகொண்டது. அதை வெளிக்கொண்டுவர தாமதமானதால் இன்னொரு பாம்பை லாலிடம் கொடுத்துவிட்டனர்.. அவருக்கு பாம்பை பிடித்தபடி ஒரே ஷாட்டில் வசனம் பேசி நடிப்பது பயமாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் பாலாவுக்கும் அவரது நண்பராக நடித்தவருக்கும் அந்த காட்சியில் நடிப்பது திக் திக் என்று இருந்ததாம். காரணம் இன்னொரு பாம்பு புகுந்துகொண்ட பாறை மேல் நின்றுகொண்டு தான் நடிக்க வேண்டும். கீழே இருக்கும் பாம்பு எந்த நேரம் மேலே வரும் என தெரியாமல், அதேசமயம் பயத்தையும் வெளிக்காட்டாமல் ஒரு வழியாக கஷ்டப்பட்டு நடித்து முடித்தார்களாம்.