ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தின் கதை மீது நம்பிக்கை வர வைப்பது கடினம். அப்படி வந்துவிட்டால் அது செல்லும் பாதைக்காக பயணத்துக்காக எந்த எல்லை வரையும் தயாரிப்பாளரைப் போக வைக்கும். அப்படி ஒரு தயாரிப்பாளரைப் போக வைத்துள்ள படம்தான் நின்று கொல்வான் . படத்தின் நாயகன் புதுமுகம் அர்ஜுன் சந்திரா. நாயகி கருணா டோக்ரா. இவர் டில்லிமாடல். ஆசீஷ் வித்யார்த்தி, ராஜீவ் பிள்ளை, நிழல்கள் ரவி, கீதா, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை வி.பி.சங்கர் இயக்குகிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சர்வதேச இசை நிகழ்ச்சிகளில் பங்களிப்பு செய்த ஜுடா.சாண்டி இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புகள் தயாரித்த ஏ.என் திருமுருகன், ஹம்சவர்ஷா பிலிம்ஸ் பி லிமிடெட் சார்பில் தயாரிக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் A.N.திருமுருகன் கூறும் போது, "இது ஒரு காதல் கதைதான். விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர். இது வரை யாரும் தொடாத மெடிக்கல் சம்பந்தமான ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கிறோம். கதை பிடித்து இருந்ததால் இந்தியாவின் பல இடங்களுக்கும் போய் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படி இந்தியா முழுக்க ஒன்றரை ஆண்டுகள் சுற்றிச் சுற்றி படத்தை எடுத்தோம். சென்னையிலிருந்து தொடங்கி பெங்களுர்,உடுப்பி, மைசூர், கூர்க், கோவா எனப் பயணம் செய்து வட இந்தியா பகுதி வரை போய் படம் எடுத்தோம்" என்றார்.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடத்திலும் தயாராகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்திருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸாக இருக்கிறது.