ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. ஆனால் ஒரு சிலருக்குத்தான் இது பொறுக்காதே.. கோலம் பகுதியை சேர்ந்த ஒருவர் உடனே மனித உரிமை கழகத்திற்கு புகாரை தட்டிவிட்டார்.
அதில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அதிக காட்சிகளை திரையிட்டு வருவதாகவும், இதற்காக வழக்கமான காட்சி நேரங்களை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு சிரமம் தருவதாகவும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதகாவும் அந்த புகாரில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே ஜெட் வேகத்தில் செயல்பட்ட மனித உரிமை கழகம் இந்த புகாரை அப்படியே கேரள அரசுக்கு அனுப்பி வைத்து இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கேரளா அரசு இது குறித்து கொல்லம் முனிசிபாலிட்டி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது