தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் ஒரு துறையாக சினிமாத் துறை இருந்து வருகிறது. திரைப்படத் தயாரிப்பில் இருந்து தியேட்டர்களில் சைக்கிள் நிறுத்தும் கட்டணம் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புழங்கும் ஒரு துறையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் பெரிய மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் எனப்படும் ஒரே வளாகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் சராசரியாக 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மற்ற தியேட்டர்களில் குளிர்சாதனத் தியேட்டர்களாக இருந்தால் 50 ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லையென்றால் 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் படங்களுக்கேற்ப 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல காலமாகவே புகார்கள் உள்ளன.
'கபாலி' படம் வந்த போது 1000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அரசு நிர்ணயித்த கட்டணங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஒரு மாதத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தங்களது டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்கிறார்கள். கேளிக்கை வரி, மின்சாரம், இதர செலவுகள் ஆகியவை அதிகமாகிவிட்டதால் டிக்கெட் கட்டண உயர்வு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள்.
ஏற்கெனவே தியேட்டர்களுக்கு மக்கள் படம் பார்க்க வரவில்லை என்ற கவலை திரைத் துறையினரிடம் அதிகமாக இருக்கிறது. ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்கச் சென்றால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு டிக்கெட் கட்டணமாக 480 ரூபாயும், ஆட்டோ, கார் என்றால் போக வர 300 ரூபாயும், இடைவேளையில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பண்டங்களை வாங்கினால் 300 ரூபாயும் என 1000 ரூபாய் வரை ஆகிறது என நடுத்தரக் குடும்பத்தினர் புலம்புகிறார்கள்.