ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கபாலி படத்தின் புகழ்பெற்ற நெருப்புடா... பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ். பீட்சாவில் தொடங்கி ஜிகிர்தண்டா, டார்லிங், காக்கி சட்டை, தெறி உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கபாலியின் நெருப்புடா... உள்பட பல பாடல்களையும் பாடியுள்ளார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அருண்ராஜா ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார்.
முதன் முறையாக மரகத நாணயம் என்ற படத்தில் முழுநீள கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி வருகிறார். படத்தில் நடிப்பது பற்றி அருண்ராஜா காமராஜ் கூறியதாவது:
முதல் முறையாக நான் ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நரை முடியோடு தோன்றும் என்னுடைய கதாபாத்திரம் இந்த மரகத நாணயம் கதைக்களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒலி மற்றும் குரல் தான் மரகத நாணயம் படத்தின் தனித்துவமான சிறப்பம்சம். ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமை, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இத்தகைய வலிமையான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த தயாரிப்பாளர் டில்லி பாபு சார் மற்றும் இயக்குனர் ஏ ஆர் கே சரவண் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய திரையுலக வாழ்வில், இந்த மரகத நாணயம் சிறந்ததொரு அதிர்ஷ்ட கல்லாக விளங்கும் என முழுமையாக நம்புகிறேன் என்கிறார் அருண்ராஜா காமராஜ்.