ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள குணசித்திர நடிகை கவியூர் பொன்னம்மா. 500 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். இவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவியூர் பொன்னம்மாவிடம் ஜிதீஷ் என்ற 35 வயது இளைஞர் டிரைவராக இருந்தார். இவர் பொன்னம்மாவை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிதீஷை பொன்னம்மா வேலையைவிட்டு நீக்கினார். இதனால் ஜிதீஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் கவியூர் பொன்னம்மா படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது ஜிதீஷூம் அவரது நண்பர்களும் ஓட்டலின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொன்னம்மாவின் விலை உயர்ந்த காரை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து பொன்னம்மா போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜிதீஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.