ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமாருக்கு நாளை மறுநாள் 75வது பிறந்த நாள். இதையொட்டி அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக சிவகுமார் வரைந்த ஓவியங்களிலிருந்து 100 ஓவியங்களை தேர்வு செய்து அதனை கண்காட்சியாக வைத்துள்ளனர்.
சென்னை லலித் அகாடமியில் வைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை முன்ளாள் ஓவியக் கல்லூரி முதல்வர் அல்போன்சா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள் வீர சந்தானம், மணியன் செல்வம், தியாகு, ஏ.பி.ஸ்ரீதர், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது: நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பது என் எண்ணம். இந்த ஆண்டு 75வது பிறந்த நாள் என்பதால் என் மகன்களின் அன்பை மீற முடியவில்லை. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள், நான் மகாபாரதத்தையும், கம்பராமாணயத்தையும் 3 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் குறிப்பை பார்க்காமல் பேசிய நாட்கள்தான். அதற்கு அடுத்த முக்கியமான நாள் இன்றுதான்.
ஓவியனாகும் கனவுடன் தான் சென்னை வந்தேன். ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். இங்குள்ள ஓவியங்கள் எனது 16 வயது முதல் 24 வயது வரை வரைந்த ஓவிங்கள். நான் என்னை நடிகன் என்பதை விட ஓவியன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன். இந்த ஓவியங்களை பார்க்கும்போது என் பால்ய காலத்துக்கு சென்று விடுகிறேன். இவற்றை இங்கே அழகாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களை புத்தகமாகவும் வெளியிட இருக்கிறார்கள். எனக்கு பிறகும் இந்த ஓவியங்கள் வாழும். இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார் சிவகுமார்.