திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகி சில தினங்கள் நடித்தார் சிம்பு. ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் கிடைத்ததால் அந்த படத்தை இயக்க சென்று விட்டார் கெளதம்மேனன். சிம்புவும் அதற்கு விட்டுக்கொடுத்து, அந்த இடைவெளியில் வாலு படத்தில் நடித்து வந்தார். பின்னர் என்னை அறிந்தால் ரிலீசான பிறகு மீண்டும் அச்சம் என்பது மடமையடா படம் தொடங்கப்பட்டது.
அதையடுத்து வேகமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடைசியாக ஒரு பாடலை மட்டும் படமாக்க வேண்டியிருந்தபோது, கெளதம்மேனன்- சிம்புவுக்கிடையே சம்பள பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் பின்னர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படவேலைகளில் இறங்கினார் கெளதம். இந்நிலையில் சில மாதங்களுக்குப்பிறகு சிம்புவுடனான கருத்து வேறுபாடு நீக்கப்பட்டு கடைசி பாடலிலும் அவர் நடித்துக்கொடுத்து விட்டார். அதனால் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது அச்சம் என்பது மடமையடா.
மேலும், ஏற்கனவே அப்படத்தின் முதல் டரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தள்ளிப்போகாதே -என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று அப்படத்தின் 2வது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதையும் சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் டிரென்ட் செய்து வருகின்றனர்.