இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாடகர்கள் கானா பாலா, கானா உலகநாதன், கானா அந்தோனி போன்றவர்கள் தான் தாங்களே பாடல்கள் எழுதி பாடி நடித்தும் வந்தனர். அந்த வரிசையில்,
கடந்த சில ஆண்டுகளாக அருண்ராஜா காமராஜூம் இணைந்திருக்கிறார். சில படங்களில் கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், பல படங்களில் பாடல்கள் எழுதி பின்னணியும் பாடி வருகிறார். என்றாலும், சந்தோஷ் நாராயணன் இசையில் கபாலி படத்தில் எழுதிய பாடிய நெருப்புடா பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டது.
அதனால் இப்போது அவரது மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. கபாலிக்குப்பிறகு ரெமோ, வாகா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என பல படங்களில் பாடல்கள் எழுதி பாடி வரும் அருண்ராஜா காமராஜ், நெருப்புடா ஹிட்டைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பல புதிய படங்களில் பாடல் எழுதி பாடி வருகிறார். இதில் மரகத நாணயம் -என்ற படத்தில் ஒரு அதிரடியான பாடலை அவரை எழுதி பாட வைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன். இந்த பாடல் இன்னொரு நெருப்புடா என்று தன்னை சந்திப்பவர்களிடம் கூறி வருகிறார்.