தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்டடியாக வைத்திருக்கும் நடிகர்களில் விஷால் முக்கியமானவர். ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த படத்தில் அதை எப்படியாவது சமாளித்து தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்வார். 'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு அவருடைய படம் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியையாவது பெற்று வருகின்றன. இதனால் அவருடைய மார்க்கெட்டுக்கும் பெரிய பாதிப்பு எதுவும் வருவதில்லை.
தற்போது 'கத்திச் சண்டை' படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க உள்ளார். இதில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் ஏற்கெனவே நடிக்க ஆரம்பித்துவிட்டார். அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத் திரை' படத்தில் கடந்த வாரம் முதல் நடித்து வருகிறார். இதற்கடுத்து நவம்பர் மாதம் முதல் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்திற்காக ஹீரோயின் தேடும் வேலை பரபரபப்பாக நடந்து வருகிறது. கீர்த்தி சுரேஷை இப்படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச் சண்டை' படம் காமெடி, ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பதால் அந்தப் படம் தனக்கு திருப்புமுனையான படமாக இருக்கும் என்று விஷால் நம்புகிறாராம். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்குத் தற்போது நடித்து வரும் மற்ற மூன்று படங்களும் வெளியாக உள்ளன.