ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராதாமோகன் டைரக்ட் பண்ணிய 'கௌரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் அல்லு சிரிஷ்.. இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. தமிழில் 'கெளரவம்' படம் அவருக்கு வரவேற்பு தராத நிலையில், தெலுங்கிலேயே கிடைத்த படங்களில் நடித்துவந்த அல்லு அர்ஜுனின் கவனம், மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியது.. தனது அண்ணன் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மலையாளத்தில் இருக்கும் மவுசை உபயோகப்படுத்திக்கொண்டு தானும் மலையாள சினிமாவுக்குள் நுழையலாமா என கடந்த ஒரு வருடமாகவே தக்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாராம் அல்லு சிரிஷ்..
ஆனால் அவருக்கு ரொம்பவே சிரமம் வைக்காமல், மலையாள வாய்ப்பு அவரையே தேடிவந்து கதவை தட்டியிருக்கிறது.. அதுவும் ஜாக்பாட் வாய்ப்பு.. மோகன்லால்-மேஜர் ராவி காம்பினேஷனில் ராணுவ பின்னணியில் உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு.. முன்பு தமிழ் நடிகர் ஜீவாவுக்கு 'கீர்த்தி சக்ரா (அரண்) மூலமாக இதுபோல கிடைத்த வாய்ப்பு அவரது கேரியரை ஒருபடி உயர்த்தியது.. அதேபோல அல்லு சிரிஷுக்கும் அவரது சினிமா பயணத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய படமாக இது இருக்கும்.. இந்திய-சீன எல்லைப்போரை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்தப்படத்தில் டேங்க் கமாண்டர் வேடத்தில் நடிக்க இருக்கிறார் அல்லு சிரிஷ்.