டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வளரும் ஹீரோக்களாகவே இருந்தார்கள். விஜய், விக்ரம் இருவருக்கும் அப்போது மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆண்டு 2003. அந்த ஆண்டில் இதே தினத்தில் வெளிவந்த 'திருமலை, பிதாமகன்' ஆகிய இரண்டு படங்கள் முறையே அவர்களுக்குத் திருப்புமுனை தந்த படங்களாக அமைந்தன.
'திருமலை' படத்திற்கு முன்பாக விஜய் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல் இருந்தார். காதலை மையமாகக் கொண்ட படங்களில்தான் அவர் அதிகம் நடித்து வந்தார். 'திருமலை' படம்தான் அவரை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டிய படம். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மிகப் பெரும் திருப்புமுனையைத் தந்தது. அதன் பின் விஜய் என்றாலே அதிரடி, பன்ச், அட்டகாசம் என அவருடைய ரசிகர்கள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
'பிதாமகன்' படம் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான படம். அந்தக் காலகட்டத்தில் ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது அபூர்வமானதாக இருந்தது. பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சேது' படமும், சூர்யா நடித்த 'நந்தா' படமும் அவர்களுக்குத் திருப்புமுனை தந்த படங்களாக இருந்தது. அவர்களிருவரையும் சேர்த்து பாலா இயக்கிய படம்தான் 'பிதாமகன்'.
தமிழ்த் திரையுலகத்தில் இப்படி கூட ஒரு கதைக்களம் இடம் பெற முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் அந்தப் படமும் ஒன்றாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. விக்ரமிற்கு தேசிய விருதை பெற்றுத் தந்த இந்த படம், சூர்யாவை சிறந்த நடிகராக தமிழ்த் திரையுலகத்திற்கு அடையாளம் காட்டியது.
படத்தில் நடித்தவர்களுக்குத் திருப்புமுனை தந்த படங்களான 'திருமலை, பிதாமகன்' ஆகிய இரண்டு படங்களும் இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளன. விஜய் ரசிகர்களும், விக்ரம் ரசிகர்களும் இந்தக் கொண்டாட்டத்தை காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.