துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தோழா படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் காஷ்மோரா. இதுவரை ஆக்சன், ரொமான்ஸ் என்று வழக்கமான கதைகளில் நடித்து வந்த அவர், இந்த படத்தில் முதன்முறையாக சரித்திர கதையில் நடித் திருப்பதோடு, இரண்டு மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி சென்று இந்த படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் கோகுல். அந்த வகையில், இதுவரை தான் நடித்த படங்களை விட கூடுதல் நாட்கள் கால்சீட் கொடுத்து, கூடுதலான ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித் துள்ளார் கார்த்தி. அவர் இந்த படத்திற்காக உழைத்ததை அனைருமே உச் கொட்டுகிறார்கள். அந்த அளவுக்கு பல நாட்களாக தூக்கமின்றி இரவு பகலாக நடித் துள்ளாராம் கார்த்தி.
மேலும், இந்த படத்தில் அவரது நடிப்பு புரட்சிகரமாகவும் அமைந்திருக்கிறதாம். இதை கேள்விப்பட்ட கார்த்தியின் ரசிகர்கள் இதுவரை அவருக்கு பெரிதாக பட்டப்பெயர் சூட்டாத நிலையில், தற்போது சென்னை நகரத்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள காஷ்மோரா கட்அவுட்டில் புரட்சி வீரன் கார்த்தி என்று குறிப்பிட்டுள்ளனர். அண்ணன் சூர்யாவைப்போலவே கார்த்திக்கும் பெயருக்கு முன்பு பட்டப்பெயர் சூட்டிக்கொள்ளும் ஆர்வம் இல்லை என்றபோதும், புரட்சி வீரனை சூட்டிக்கொள்ளுமாறு அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.