ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நசீருதீன் ஷாவிடம், பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அமைப்பினர் முழக்கமிட்டு வருவது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பை தாக்கும் வகையில் பேசினார். பேட்டியில் அவர், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றும் படங்கள் திரையிடப்படும் சினிமா அரங்குகளை இடித்து தள்ளுவோம் என இந்த வீரர்கள் அனைவரும் மிரட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள், பாலிவுட் படத் தயாரிப்பாளர்களுடன் மோதுவதை விட எல்லைக்கு சென்று பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு, அவர்களின் முகாம்களை அழிக்கலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது கூட நமது அரசு பாகிஸ்தான் உடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இவர்கள் மட்டும் ஏன் சினிமா நடிகர்களை குறிவைக்கிறார்கள்? என பேசி உள்ளார்.