பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கிய படம் தரமணி. புதுமுகம் வசந்த்ரவி, ஆண்ட்ரியா நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஐ.டி துறை பின்னணியில் நடக்கும் யூத்புல்லான காதல் கதை. இன்றைய இளம் தலைமுறையின் காதலை தன் பாணியில் சொல்லவிருக்கிறார் ராம்.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ராமும் மம்முட்டி நடிக்கும் பேரன்பு படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் அவருக்கு இருக்கும் சில நெருக்கடிகள் காரணமாக ரிலீசை தள்ளிப்போட்டு வந்தார். இப்போது படத்தின் ஷெட்யூலை அறிவித்து விட்டார்கள். அதன்படி வருகிற நவம்பர் 20ந் தேதி பாடல்களை வெளியிடுகிறார்கள். டிசம்பர் 23ந் தேதி படத்தை வெளியிடுகிறார்கள். இதுகுறித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
வலுவான கதைக் களங்களை கொண்ட திரைப்படங்கள் மட்டும் தான் தேர்வு செய்து நான் தயாரித்து வருகிறேன். அந்த வகையில் எங்கள் ஜே எஸ் கே நிறுவனத்தின் சிறந்ததொரு படைப்பாக தரமணி திரைப்படம் இருக்கும். வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் மற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை போல தரமணி திரைப்படமும் இருக்கும். மிகுந்த உற்சாகத்துடனும், அசைக்க முடியாத தன் நம்பிக்கையுடன் முதல் முறையாக வர்த்தக களத்தில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் ராம். புதுமையான விளம்பர யுக்தியை கையாள இருக்கின்றோம். தரமணி திரைப்படத்தின் தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டு விட்டதால், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிட உள்ளோம். என்கிறார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்.