ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கும்போது அவர்களுக்குள் ஈகோ வருவது இன்று, நேற்றல்ல முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 1962ம் வருடம் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும். இதில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, கமலஹாசன் (குழந்தை நட்சத்திரம்) உள்ளட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படம் முடிந்ததும் சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி இவர்களில் யார் பெயரை டைட்டில் கார்டில் முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. "நான்தான் இப்போது மார்க்கெட்டில் நம்பர் ஒண் இடத்தில் இருக்கிறேன் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சரோஜாதேவி. "நான்தான் சீனியர் என்பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சாவித்ரி, "எல்லோருக்கும் சீனியர் நான். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவள் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் சவுகார் ஜானகி. எல்லோரிடமும் சரி சரி என்ற தலையாட்டிவிட்டார் பீம்சிங்.