தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கும்போது அவர்களுக்குள் ஈகோ வருவது இன்று, நேற்றல்ல முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 1962ம் வருடம் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும். இதில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, கமலஹாசன் (குழந்தை நட்சத்திரம்) உள்ளட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படம் முடிந்ததும் சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி இவர்களில் யார் பெயரை டைட்டில் கார்டில் முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. "நான்தான் இப்போது மார்க்கெட்டில் நம்பர் ஒண் இடத்தில் இருக்கிறேன் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சரோஜாதேவி. "நான்தான் சீனியர் என்பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சாவித்ரி, "எல்லோருக்கும் சீனியர் நான். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவள் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் சவுகார் ஜானகி. எல்லோரிடமும் சரி சரி என்ற தலையாட்டிவிட்டார் பீம்சிங்.